கனடா: கனடாவை தாக்கிய டோரியன் புயலால் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. கரீபியன் தீவு-க்கு அருகே உருவான டோரியன் புயல் கடந்த சில நாட்களுக்கு முன் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாஸை தாக்கியது. இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் டோரியன் புயலுக்கு பஹாமாஸிஸ் 43 பேர் பலியாகினர். இந்நிலையில் கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் ஹெலிபேக்ஸ் நகரின் நேற்று முன்தினம் இரவு டோரியன் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் மேற்க்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலின் போது கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.