திஸ்பூர்: இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாக குடியேற அனுமதிக்க முடியாது என்றும் அதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் தாஸ் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து அமித்ஷாவிடம் விரிவாக பேசியதாக தெரிவித்தார். இந்தியாவிற்குள் ஒருவரை கூட சட்டவிரோதமாக குடியேற்றக் கூடாது என்பதில் அமித்ஷா உறுதியுடன் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தம்மிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருப்பதாக ரஞ்சித் தாஸ் கூறினார்.