தாராபுரம்: விளைச்சல் அதிகரித்ததால், ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இரண்டரை டன் தக்காளி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர். பயிர் செய்தபோது ஒரு கிலோ தக்காளி 25 முதல் 30 வரை விற்கப்பட்டது. இதனால், லாபம் அதிகம் கிடைக்கும் எனக்கருதி, ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து விவசாயிகள் தக்காளி பயிர் செய்தனர். எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிலோ 15க்கு விற்கப்பட்டது.