வெப்ப சலனம் நீடிப்பு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெப்ப சலனம் நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வந்தாலும், தமிழகத்தில் நீடிக்கும் வெயில் காரணமாக இந்த வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதனால் தமிழகத்தில்  பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தேவாலாவில் 50 மிமீ மழை பெய்துள்ளது. சின்னகல்லார் 30 மிமீ, வால்பாறை 20 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் தூறல் இருந்தது.  இந்நிலையில், வெயில் காரணமாக நீடித்து வரும் வெப்ப சலனத்தால், மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கோவை,  நீலகிரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

Related Stories: