சென்னை: எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக டி.லிங்கேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு, நீதிபதியாக ஜெ.சாந்தி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்குகள் அதிகமாக இருப்பதால், மேலும் இரண்டு புதிய நீதிமன்றங்கள் கடந்த ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.