சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி, பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பொறுப்பேற்று, ஓராண்டு பணியாற்றிய நீதிபதி தஹில் ரமானி வெறும் 2 நீதிபதிகளை மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.75 நீதிபதிகள் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். இது மூன்று முக்கிய பெரிய நீதிமன்றங்களில் ஒன்று. அவரது இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியத்தைக் கேட்டுள்ளார். அவர்கள் மறுபரிசீலனை கிடையாது என்று மறுத்துவிட்டனர்.