ஸ்ரீநகர்: காஷ்மீர், இமாச்சலில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று காஷ்மீரின் தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.04க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. சில நிமிடங்கள் நிலநடுக்கம் நீடித்தது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து, வீடுகளைவிட்டு வெளியே வந்தனர்.