திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று இரவு முதல் போலீசார் விடியவிடிய நடத்திய ஸ்டாமிங் ஆபரேஷனில் 510பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர். அப்போது, வாகன தணிக்கை, தங்கும் விடுதிகளில் சோதனை, குடிபோதையில் வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தல், உரிய ஆவணங்கள் இன்றி விடுதிகளில் எவரேனும் தங்கியுள்ளார்களா,