சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா இருங்கல் கிராமத்தை சேர்ந்த வி.முனிகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பசுவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 லிருந்து 32 ஆகவும், எருமை பால் விலை 35 லிருந்து 41 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மக்களில் பெரும்பாலானோர் ஆவின் பாலைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, பால் விலையை உயர்த்தி வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 17ம் தேதி வெளிவந்த அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘டாஸ்மாக்கில் மது விலையை எவ்வளவு உயர்த்தினாலும் கூட்டம் குறைவதில்லை.