கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன் (36). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனிதா (34). இவர்களுக்கு அபிக்ஷா (13), அனுஸ்ரீ (10), அக்ஷதா (8) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். முருகன் குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முருகன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதை வனிதா கண்டித்தும் முருகன் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்த வனிதா பாலில் விஷம் கலந்து 3 மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 4 பேரும் மயங்கி கிடந்தனர்.