கொடுமுடி: கொடுமுடியில் மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்வதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடுமுடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 10க்கும் மேற்பட்ட சிறு உணவகங்களும் உள்ளன. இப்பகுதியில் கொடுமுடி பேரூராட்சியின் குடிநீர் இணைப்புகள் மூலம் காவிரி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை குடிநீருக்காகவும் மற்ற உபயோகத்துக்காகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.