ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களி படகுகளை, இலங்கை அரசின் புதிய சட்டத்தின்படி அரசுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் மீன்பிடி படகுகள், அரசுடைமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை  கண்டித்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் சங்க தலைவர் சகாயம் தலைமையில் நடந்தது. இதில் இலங்கை சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்தொழில் செய்யும் வகையில், மீன் உணவு அரவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி ஆக.24 முதல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் துவங்கியதால், 800க்கும் மேற்பட்ட படகுகள் கரை நிறுத்தப்பட்டன. வரும் 29ம் தேதி மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: