சவூதி: பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது வழங்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி இரு நாட்டு நல்லுறவுக்கு மேற்கொண்ட பணிகளை போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஜயத் விருதை அறிவித்தது. இந்நிலையில் மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்த விருதை பட்டத்து இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யான் வழங்கினார்.