தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. குற்றாலத்தில் சீசன் நிறைவு கட்டத்தை எட்டி வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இதில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் சீசன் சுமாராக இருந்தது. பெரும்பாலான நாட்கள் இல்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் இருந்தே சீசன் நன்றாக உள்ளது. சாரலும் நன்றாக பெய்கிறது. இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.