ஈரோடு: ஈரோட்டில் இன்று 2வது நாளாக நடந்த இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 2,700 பேர் கலந்து கொண்டனர். இந்திய ராணுவத்தில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஈரோடு வஉசி மைதானத்தில் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் ஈரோடு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.