நெல்லை : பாளையில் அமைக்கப்பட்டுள்ள உர செயலாக்க மையத்தில் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக குடியிருப்போர் புகார் தெரிவித்துள்ளனர். பாளை என்ஜிஓ ஏ காலனி அருகே மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட சக்திநகர், நீலகண்டநகர் பகுதியில் உரம் செயலாக்க மையம் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதமாக மேலப்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து நுண் உரம் என்ற பெயரில் மாமிச கழிவுகள், மீன் கழிவுகள், கோழிக்கழிவுகளை கொண்டுவந்துகொட்டுகின்றனர்.