மதுரை: மதுரை, நாகமலைபுதுக்கோட்டையைச் ேசர்ந்த சோம்நாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும். எனது மகன் நீட் தேர்வில் 93.7 சதவீத மதிப்பெண் பெற்றார். இதன்மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைப்பது உறுதியானது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 126 இடங்களுக்கு வெளிமாநில மாணவர்களும் கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர். இந்த இடங்களுக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களைக் ெகாண்டே நிரப்ப வேண்டும். ஆனால், இதுகுறித்து மாணவர் சேர்க்கைக்கான குறிப்பேட்டில் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் வெளிமாநிலத்தவர் அதிகளவு சீட் பெறுவர். இவர்களுக்கு சீட் ஒதுக்குவதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை.