நெல்லிக்குப்பம்: ‘‘முகவர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் பால் விலையை உயர்த்ததான் வேண்டும். விலையை ஒரேயடியாக ஏற்றாமல் சிறிது சிறிதாக ஏற்றினால் மக்களுக்கு பளு தெரியாது’’ என்று தமிழக அரசு தமிழிசை யோசனை தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் குறை சொல்வதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பால் முகவர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் பால் விலையை உயர்த்ததான் வேண்டும்.