விருதுநகர்: ஒருங்கிணைந்த இந்தியாவை வலியுறுத்தி கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை, சென்னை பெண் பைக்கில் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார். சென்னையில் பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் ராஜலட்சுமி மந்தா. இவர் ஒருங்கிணைந்த இந்தியாவை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பைக்கில் யாத்திரை செல்கிறார். நேற்று முன்தினம் (ஆக.15) கன்னியாகுமரியில் தனது பயணத்தை துவக்கிய ராஜலட்சுமி மந்தா நேற்று விருதுநகர் வந்தார். அவருக்கு விருதுநகரில் வெயிலுக்கு உகந்தம்மன் கோயில் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜலட்சுமி மந்தா கூறுகையில், ‘‘ஒரே இந்தியாவை வலியுறுத்தி தேசியக்கொடியை ஏந்தி முதல் குழுவாக நாங்கள் செல்கிறோம்.