வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையில் மீனவர்கள் தங்களுக்கு வாழ்வளித்துவரும் கடல் மாதாவிற்கு நன்றி செலுத்தும் வகையில் மீன்வளம் பெருக வேண்டி கடலில் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
வேதாரண்யம் அருகே உள்ள மீனவர் கிராமமான ஆறுகாட்டுத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ள நிலையில் மீன்பிடி தொழிலுக்காக 65 விசைப்படகுகளும், 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளை கடலுக்கு மீனவர்கள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாத கடைசியில் ஒருநாள் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து கடல் பூஜை செய்வார்கள்.