திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த ஆளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் மணி. இவரது தங்கை கல்பனாவை கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ரமணிபுதூரை சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தம்பதிக்கு மனீஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை இருந்தது. கடந்த 10ம் தேதி ஆளூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மனீஷை அவனது பெற்றோர் ஆளூர் கிராமத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.