லக்னோ: நீதிமன்றத்துக்கு வாய்தாவுக்கு வந்து சென்ற ரவுடியுடன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசுக்கு காதல் ஏற்படத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இச்சம்பவம் உத்தரபிரதேச போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் தாதாவான ராகுல் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வந்தாலும் வெளியில் வந்த பிறகும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், தற்போது அவர் நடத்தியுள்ள காதல் கதை, போலீசார் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் பாயல் என்பவர் சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். அப்போது அங்கு கொலை வழக்கு ஒன்றின் குற்றவாளியாக ஆஜரான ராகுல் தரசனா என்பவர் மீது பெண் போலீசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.