சட்டக்கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலன்: திருச்சியில் பயங்கர சம்பவம்

திருச்சி: திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய அவரது காதலன் முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் சுந்தர் மகள் ரம்யா(23). இவர் திருச்சி காஜாமலையில் உள்ள மூன்று கல்லூரி மாணவிளுடன் சேர்ந்து வாடகைக்கு அறை எடுத்து தங்கி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், காரைக்காலை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தவச்செல்வன் என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதமாக ரம்யா, தவச்செல்வனிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் தனது அறையில் ரம்யா துணி துவைத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பெட்ரோல் கேனுடன் வந்த தவச்செல்வன், ரம்யா உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.  ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு, உடன் தங்கியிருந்த மாணவிகள் வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து ரம்யாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு ரம்யாவிடம் கே.கே.நகர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தவச்செல்வன் தான் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தவச்செல்வனை தேடி வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவியை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகையில் போலீஸ் தேடுதல்:  தவச்செல்வன் நாகை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார்  நாகைக்கு விரைந்துள்ளனர். அவர் பிடிபட்டால் மட்டுமே நடந்தது என்ன என்பது முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: