புதுடெல்லி: உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், திரிபுரா, நாகாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச ஆளுநர் ராம்நாய்க்கிற்கு பதிலாக மத்தியபிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் படேலை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதே போல் மேற்குவங்க ஆளுநராக கேசரிநாத் திரிபாதிக்கு பதில் ஜெக்தீப் தாங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.