புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் தாக்கப்பட்ட பெண் வன அதிகாரி அனிதா மீது வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஆசிபாபாத் மாவட்டம், காகஸ்நகர் மண்டல வன அதிகாரி அனிதா, வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மரக் கன்றுகளை நட வனத்துறை ஊழியர்களுடன் சமீபத்தில் சென்றார். அங்கு சென்ற ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த சிர்கூர் தொகுதி எம்எல்ஏ கொனேறு கண்ணப்பாவின் சகோதரர் கிருஷ்ணா ராவ், தனது அடியாட்களுடன் வனத்துறை ஊழியர்களை கம்பால் அடித்து விரட்டினார். இதில், அனிதா கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வழக்கில் கிருஷ்ணா ராவ் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜூலை 8ம் தேதி சிர்சலா கிராமத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அனிதா மற்றும் வனத்துறை ஊழியர்கள் 15 பேர் மீது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.