மேலும் 2 மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்:ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மேலும் இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:தமிழக அரசு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்களை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல, கும்பகோணத்தை தனி மாவட்டமாகவும் மற்றும் வேலூரை மாவட்டங்களாக பிரித்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும். சோழப் பேரரசில் தலைநகராக விளங்கிய கும்பகோணம் தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.

எனவே கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி வாழ் மக்களின் கோரிக்கையான கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தையும் பிரித்து புதிய மாவட்டங்களாக அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கக்கன் குடும்பத்தினருக்கும் நல்லகண்ணுக்கும் அரசு வீடு ஒதுக்கித் தந்த அரசின் அறிவிப்புக்கு மற்றொரு அறிக்கையில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் ஜி.கே.வாசன்.

Related Stories: