மம்தா, மாயாவதி, சரத்பவார் கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழக்கும் நிலை? விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகள் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அந்த கட்சிகளின் தலைமைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னம் தொடர்பான சட்டவிதியின் படி 4-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை பெறும் கட்சியே தேசிய கட்சி என்று அங்கீகரிக்கப்படும்.

மேலும் அந்த கட்சிக்கு மக்களவையில் குறைந்தது 4 உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியாக கருதப்படும். மக்களவையின் மொத்த இடங்களில் 2 சதவீத இடங்களை பெற்று அந்த இடங்களுக்கு குறைந்தது 3 வெவ்வேறு மாநிலங்களின் உறுப்பினர்கள் தேர்வாகி இருந்தாலும் தேசிய அரசியல் கட்சி அந்தஸ்தை பெற முடியும். அந்த அடிப்படையில் மேற்சொன்ன கட்சிகள் மக்களவை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திருப்பதே சிக்கலுக்கு காரணமாகும்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவை தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மராட்டியத்தில் 5 இடங்களில் மட்டுமே தேசியவாத காங்கிரஸ் வென்றுள்ளது. அடுத்த மாதம் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி தேர்தல் ஆணையம் இந்த கட்சிகளின்  தலைமைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: