25,000க்கு விற்ற குழந்தை கர்நாடகாவில் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் வள்ளூவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(38). இவரது மனைவி முத்துலட்சுமி(32). முத்துலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதே போல்,  குமரேசனுக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு பிறந்த 14 மாத ஆண் குழந்தையை ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, குழந்தையை 25 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் புகாரின்படி மகாராஜகடை போலீசார் விசாரணையில், குழந்தை, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருப்பது தெரிந்தது. அங்கிருந்து மீட்டுள்ளனர்.

Related Stories: