சென்னை: குறைந்த காற்றழுந்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல கிழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவையின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.