கொடைக்கானல்: யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இங்கு வருபவர்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலையை கண்டுரசிக்க அதிகளவு விரும்புகின்றனர். இங்கே செல்வதற்கு கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.