சென்னை: சென்னையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், மறைந்த உறுப்பினர்கள் கனகராஜ், ராதாமணிக்கு ஜூன் 28ம் தேதி இரங்கல் தெரிவிக்கப்படும் எனக் கூறினார். ஜூன் 29ல் வனம், சுற்றுசூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் செய்யப்படும் என தெரிவித்தார். ஜூலை 2ல் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதி விவாதம் செய்யப்படும் என தெரிவித்தார்.