கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வனம் அமைப்பின் மூலம் நடப்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து காட்சி அளிக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு சூலூர் சிரியக்குளத்தின் கரைப்பகுதியில் வன அமைப்பின் மூலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் பின்னர் சொட்டுநீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளை வானம் அமைப்பினர் பராமரித்து வந்தனர்.