கிராம சபை கூட்டம் கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: வரும் ஜூன் 28ம் தேதி நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டங்களும் முழுமையாக நடைபெற கட்சியினர் திறம்பட செயல்பட வேண்டும். 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். கடந்த முறைபோல், இந்த முறையும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அதற்கான நடைமுறையை நிர்வாகக் குழு, செயற்குழு, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி களப் பொறுப்பாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: