தக்கலை: கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று காரில் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் நாகர்கோவிலில் இருந்து கொல்லத்துக்கு காரில் திரும்பி ெசன்று கொண்டிருந்தனர். தக்கலை அரசு மருத்துவமனை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பஸ் நிறுத்தத்தில் நிற்ற மூதாட்டி மீது உரசியது. மேலும் அருகில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் மீதும் அந்த கார் உரசியது. அதைத்தொடர்ந்து சாலையோரம் போடப்பட்டிருந்த குடிநீர் குழாயில் மோதியது.