ஆறுமுகநேரி: ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோயில், ஆத்தூர் குளக்கரை கன்னிவிநாயகர் கோயில்களில் வருஷாபிஷேகம் நடந்தது. சேர்ந்தபூமங்கலத்தில் சைவ வேளாளர் சமுதாயத்தற்கு பாத்தியப்பட்ட ஆரியநாச்சி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா மஹா கணபதி ஷோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு விமான கோபுர கலசங்களுக்கும், தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி மஹா அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் உச்சிகால சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பிறகு அன்னதானம் நடந்தது. இரவு 7 மணிக்கு அம்பாள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.