சோபியான்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கும் இடங்களை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தரம்தோரா கீகம் என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக சுட்டுக கொண்டனர்.