ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை... ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

சோபியான்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கும் இடங்களை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தரம்தோரா கீகம் என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக சுட்டுக கொண்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த முகாம்களை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டனர். தப்பிக்க முடியாத நிலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் ஈடுபட்டதால் தாக்குப்பிடிக்க முடியாமல் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Related Stories: