கோவை: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 13 பேரின் உடல்களுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதையை செலுத்தினார். அதன் பின்பு, வீரர்களின் உடல்கள் அவரர்களது சொந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரான கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்ற வீரரின் உடல் விமானம் முலமாக இன்று காலை கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனம் மூலமாக ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.