டிவி நிரூபரின் கேமராவை உடைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் : விருதுநகரில் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டத்தை செய்தி சேகரிக்க போகாததால் டிவி நிரூபரின் கேமரா உடைக்கப்பட்டது. சிவகாசி திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று ஆனித் தேரோட்டம் நடந்தது, தேரோட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேரை வடம் பிடித்து இழுத்தார். இந்நிகழ்வை படம் பிடிக்க தனியார் செய்தி சேனல் செய்தியாளர் செல்லவில்லை. செய்தியாளர் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் இருந்ததை பார்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளரை சரமாரியாக திட்டினார். திட்டியதோடு இல்லாமல், செய்தியாளர் கையிலிருந்த ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை அவர் கையில் இருந்து பிடுங்கி உடைத்தார்.

Related Stories: