மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையில் வாகனச் சோதனையின் போது போலீஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாகனச் சோதனையின் போது போலீஸ் தாக்கியதில் காயமடைந்த விவேகானந்தகுமார் ஞாயிறன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். மன உளைச்சலால் தற்கொலை முயற்சியில் விவேகானந்தகுமாரின் மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: