பெரம்பூர்: தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிந்ததால், நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது படகில் சுரேஷ், குப்பன், சுரேந்தர், சண்முகம் ஆகியோருடன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார். இவர்கள் 80 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் விரிசல் ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது.