தஞ்சை: நடப்பு ஆண்டில் நீர்வரத்து 200 டிஎம்சிக்கு குறைவாகவே கிடைக்கும் என்று கணிக்கப்படுவதால், பாதுகாப்பாக மேட்டூர் அணையில் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்கு பின் நீர் திறக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.கடந்த 14 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர் குழு வாயிலாக, மேட்டூர் அணை பாசனப்பகுதியில், பல்வேறு நிலைகளை விளக்கி அந்தந்த ஆண்டுகளில் நிகழ்ந்திட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மேட்டூர் அணை நீர் வழங்கல் திட்டத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்று பல ஆண்டுகளில் அணை திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான (2019 - 2020) நீர் வழங்கல் திட்டத்தை அரசுக்கு அந்த குழு சமர்ப்பித்துள்ளது. அதில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பைவிட குறைவாகவே கிடைக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையமும் தனியார் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 11ம் தேதியில் இருந்து மழை நீர் கிடைக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அரபிக்கடலில் “வாயு” என்ற புயல் உருவாகி அது வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத்துக்கு வடக்கு-வடமேற்காக சென்று கொண்டிருக்கிறது.