குளித்தலை : குளித்தலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி வந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அடுத்த நிலையில் உள்ளது குளித்தலை தலைமை அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பிரசவத்திற்கு வரும் பெண்கள் குழந்தைகளுடன் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றால் இதற்கு முன் தனியார் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.