சென்னை: சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 69வது கிளையை மதுரவாயலில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திறந்து வைத்து, சிறுவணிக கடன், சுயஉதவி குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், பணிபுரியும் மகளிர் கடன் மற்றும் நகை கடன் என 432 பயனாளிகளுக்கு 1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:தமிழகத்தில் 196.38 கோடி பங்கு மூலதனத்துடன் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் 147 நாட்களில் திரும்ப செலுத்தும் வகையில் சிறுவணிக கடனாக தனிநபர் ஒருவருக்கு 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.