கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கீழ் குண்டாறு கூட்டு குடிநீர்த் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி மூடப்படவில்லை. இதனால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் அண்ணா சாலை, நாயுடுபுரம் சாலை, பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை, ஆனந்தகிரி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.