சென்னை: போலி ஆவணங்கள் அடிப்படையில் கடன் கொடுத்து 27.6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்தியன் வங்கியின் போரூர் கிளை முன்னாள் மேலாளர் உட்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியன் வங்கியின் போரூர் கிளை தலைமை மேலாளராக இருந்தவர் பாரி. இவர் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு போலி ஆவணங்களை பெற்று கடன் கொடுத்து 27.6 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.