வாஷிங்டன்: ஜப்பானில் உள்ள ஒசாகாவில் வரும் 28, 29ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், மாநாட்டின் இடையே சந்தித்து முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வரும் 24ம் தேதி டெல்லி வருகிறார்.