சாத்தான்குளம்: அக்னி நட்சத்திரகாலம் முடிந்த பிறகும் நீடிக்கும் வெயில், வறட்சியால் பல இடங்களில் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் தண்ணீருக்கு தவிக்கும் பறவைகள் தாகம் தீரவும் பசியாறவும் மரக்கிளைகளில் வாலிபர்கள் தண்ணீர், உணவு வைத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை பெய்யாததால் குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. குளங்களில் தண்ணீர் வற்றியதால் காட்டு பகுதியில் உள்ள பறவைகள் நீர் தேடி பல இடங்களில் அலைந்து வருகிறது. இதனையறிந்த சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் காலியான தண்ணீர் பாட்டில்களின் நடுப்பகுதியை வெட்டி எடுத்து தொட்டி போல் குடுவைகளை வடிவமைத்து அதில் தானியங்களையும்,