பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்துள்ள தி.அகரம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அளவிற்கு தண்ணீர் வசதி இருந்தும் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வழங்கும் குடிநீரை 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
பயன்படுத்தி வந்தனர். தற்போது, நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த காரணத்தால் முழுமையான கொள்ளளவில் தண்ணீர் சேமிப்பது இல்லை.