சென்னை: கோதாவரி நீர் கானல் நீர்தான் என வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை 10.30 மணி விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்தபேட்டி: நீட்தேர்வால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஐந்து மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்துக்கு தொடர்ச்சியாக ஆபத்துகள் வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழகத்தில் 274 மையங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறது. கோதாவரி தண்ணீர் தமிழகத்துக்கு வந்தால் மகிழ்ச்சிதான் ஆனால் அதை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகம் உள்ளது. கோதாவரி தண்ணீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராகத்தான் போய்விடும். இதெல்லாம் கண்துடைப்பு நாடகம் தான். தமிழகத்தை பாலைவனமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.