அண்ணாநகர்: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவரது மகன் ஸ்ரீவந்த் அருண் (17). சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வந்த் அருண் வீட்டிற்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் கோயம்பேடு வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து கீழே இறங்கி வந்த ஸ்ரீவந்த் அருண் திடீரென அருகில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி சென்று, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.